திருச்சி, ஏப். 22 –
தமிழகம் முழுவதும் உள்ள பல ஜவுளி கடைகளில் வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, திருச்சி மற்றும் சென்னையில் உள்ள சாரதாஸ் ஜவுளி கடைகளில் இந்த சோதனை நடைபெற்றது.
திருச்சி மலைக்கோட்டை என் எஸ் பி சாலையில் உள்ள சாரதாஸ் ஜவுளி கடையில், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படை வீரர்களின் பாதுகாப்பில் பத்துக்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த திடீர் சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



