திருச்சி, ஏப். 22 –
மணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூரைச் சேர்ந்த சீனிவாசன், சோழங்கநல்லூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த இளையராஜாவின் பைக் மோதி விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்தார்.
ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


