திருச்சி, மார்ச் 19 –
திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் இதயத்துடிப்பு கோளாறுகளுக்கான எலக்ட்ரோ பிசியாலஜி ஸ்டடி மற்றும் அதனுடன் தொடர்புடைய சிகிச்சைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
மருத்துவமனை முதல்வர் குமரவேல் தெரிவித்த தகவலின்படி, 2022 முதல் 2026 வரை எட்டு பெண்கள் மற்றும் ஐந்து ஆண்கள் என மொத்தம் 13 நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை வெற்றிகரமாக அளிக்கப்பட்டுள்ளது.



