மார்த்தாண்டம், ஏப். 2 –
குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற கோவில்களில் ஒன்றான திக்குறிச்சி ஸ்ரீ தர்மசாஸ்தா கோயில் பங்குனி உத்திர திருவிழா, புனர் பிரதிஷ்டை வருஷாபிஷேகம் மற்றும் 30 வது சமயவகுப்பு ஆண்டு விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
முன்னதாக கணபதி ஹோமம் உட்பட பல சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பஞ்சாவாத்தியங்கள் முழங்க கோயில் தந்திரி மற்றும் அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.
இன்று மாலை பாலாபிஷேகம், புஷ்பாபிஷேகம் உட்பட பல சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆறு நாட்கள் நடக்கும் விழாவில் முக்கிய நிகழ்வான மூன்றாம் திருவிழா அன்று உண்ணாமலைகடை விஷ்ணு ஆலயத்தில் இருந்து தாலபொலி அணிவகுப்புடன் தீபம் மற்றும் பஸ்மகுட ஊர்வலம் நடக்கிறது. 5 ம் திருவிழா அன்று பள்ளி வேட்டை ஆறாம் திருவிழா அன்று ஆறாட்டு ஊர்வலம் நடக்கிறது. கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



