தருமபுரி, ஜூன் 29 –
தருமபுரியில் உள்ள தனியார் கல்லூரிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஸ்ரீ அங்காளம்மன் பாரா மெடிக்கல் மருத்துவமனை துணை சார்ந்த படிப்புகள் நிறுவனம் சார்பில் முதலாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னதாக கல்லூரி தாளாளர் சிலம்பரசன் வரவேற்புரை வழங்கினார். இதில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கேக் வெட்டி மாணவர்களை வரவேற்றினார்கள்.
இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கூறுகையில்: சென்ற வருடம் மருத்துவத் துணை சார்ந்த படிப்புகள் சார்பில் பல்வேறு அமைப்புகள் மற்றும் மருத்துவமனை சார்ந்த மருத்துவ முகாம் மற்றும் அரசாங்க சம்பந்தப்பட்ட முகாம்களை பங்கேற்றது எங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததாக கூறினார்கள். அதேபோல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் பல்வேறு முகாம்களை அழைத்துச் சென்று பார்வையிடுமாறு இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என்று மாணவர் கூறினார். இறுதியாக இரண்டாம் ஆண்டு மாணவி கமலா நன்றி கூறினார். இதில் கல்லூரி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.



