தஞ்சாவூர், மார்ச் 18 –
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சட்டசபை பொதுத் தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல் 23 )ஆம் தேதி நடக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களது சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளவும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஏதேனும் மீறப்பட்டால் அது தொடர்பாக புகார் அளிக்கவும், அந்தந்த சட்டசபை தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர்களை தொடர்பு கொள்ளும் பொருட்டு தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவிடைமருதூர் (தனி) சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரகுமார் (9445000280), கும்பகோணம் சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் திருமலை (9445000466), பாபநாசம் சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் (7338801272), திருவையாறு சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணன் (9445477832), தஞ்சாவூர் சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் நித்யா (9445000465), ஒரத்தநாடு சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரேணுகாதேவி (9445074594), பட்டுக்கோட்டை சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கர் (9445000467), பேராவூரணி சட்ட சபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கலியமூர்த்தி (9443643392). மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.



