தஞ்சாவூர், அக்டேபர் 1 –
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 497 மனுக்கள் பொதுமக்கள் அளித்தனர்.
மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அதன் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை பகுதி சேர்ந்த ராமமூர்த்தி என்பவருக்கு குடும்ப சூழ்நிலையினை கருத்தில் கொண்டு சுயதொழில் தொடங்கி அவரது வாழ்வாதாரம் மேம்பட கோரிக்கை வைத்த இன்றே உடனடியாக தையல் இயந்திரத்தை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அவர்கள் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், சமூக பாதுகாப்புத் திட்ட தனி துணை கலெக்டர் செமியா, உதவி ஆணையர் (கலால்) ரேணுகா தேவி, பிற்பட்டோர் நல அலுவலர் ஸ்ரீதர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



