தஞ்சாவூர், மே 1 –
தஞ்சாவூர் பெரிய கோவிலில் நடைபெற்று வந்த சித்திரை பெருவிழா தீர்த்த வாரியுடன் நிறைவடைந்தது. தஞ்சாவூர் பெரிய கோவில் உலகப் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவில் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்கி வருகிறது. இங்கு பெருவுடையார், பெரிய நாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், முருகர், கருவூரார், நடராஜர், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன.
இந்த கோவிலில் நடைபெறும் விழாக்களுள் சித்திரை திருவிழாவும் ஒன்று. இந்த திருவிழா 18 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழாவிற்கு பந்தக்கால் முகூர்த்தம் கடந்த மார்ச் 6ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து ஏப்ரல் 13ம் தேதி கொடியேற்றத்துடன், விழா தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை மாலை சுவாமி புறப்பாடு நடைபெற்று பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விழாவில் முக்கிய நிகழ்வான அணை தேரோட்டம் கடந்த 27ம் தேதி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவின் நிறைவு நாளில் அஸ்திரதேவர் பல்லக்கில் கோவிலில் இருந்து புறப்பட்டு அருகில் உள்ள சிவகங்கை குளத்திற்குச் சென்றார்.
அங்கு மஞ்சள், பால், தயிர் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தவாரி நடைபெற்றது. 18 நாட்களாக நடைபெற்ற சித்திரை பெருவிழா, பக்தர்களின் பக்தியும் முழக்கத்துடன் நிறைவடைந்தது.



