தஞ்சாவூர், அக்டோபர் 31 –
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பேராசிரியர் இராமசுந்தரம் நினைவு சொற்பொழிவு நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் பாரத ஜோதி தலைமை வகித்தார். அயல்நாட்டு தமிழ் கல்வித்துறை தலைவர் குறிஞ்சி வேந்தன் வாழ்த்துரையாற்றினார். தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக சிறப்பு நிலை பேராசிரியர் மருத்துவர் நரேந்திரன் நூல்களை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். நூல்களை மொழிபெயர்ப்பாளரும் அறிவியல் தமிழ் ஆர்வலரும் பேராசிரியர் ராமசுந்தரத்தின் மகனுமான சித்தார்த்தன் பெற்றுக் கொண்டு பேசினார்.
மருத்துவம் வளர்த்த தமிழ் என்ற நூலை பேராசிரியர் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தியாகராஜனும், கலை சொல்லாக்கம் வரலாறு வளர்ச்சியும் என்ற நூலை துறை தலைவர் இந்துவும், ஈரோபியன் கான்ட்ரிப்யூசன் டு சயின்டிபிக் தமிழ் என்ற ஆங்கில நூலை முனைவர் இரா சீனிவாசனும் பாராட்டி பேசினர். நிறைவாக முனைவர் பட்ட ஆய்வாளர் விஜயகுமார் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை முனைவர் பட்ட ஆய்வாளர் தமீம் அன்சாரி தொகுத்து வழங்கினார்.



