தஞ்சாவூர், ஜூன் 9 –
தஞ்சாவூர் அருகே வயலில் சரக்கு வேல் கவிழ்ந்ததில் 26 பேர் காயமடைந்தனர். தஞ்சாவூரை அடுத்துள்ள நடுக்காவேரி அருகே அந்தலி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 35 பேர் திருப்பந்துருத்தியில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு செல்வதற்காக சரக்கு வாங்கி ஏறி சென்று கொண்டிருந்தனர். அந்தலி அருகே சென்ற இந்த சரக்கு வேன் சாலை வளைவில் திரும்பிய போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர வயலில் கவிழ்ந்தது.
இதில் சரக்கு வேனில் பயணம் செய்த மணிமேகலை, கலிய மூர்த்தி, பாரதி, சரிதா, மகேஸ்வரி, பிரவீணா, தமிழ்ச்செல்வி, கண்ணன், மின்னல் கொடி, செல்வி, சுமதி சிந்துஜா, விஜயகுமார், காளியம்மாள், சாவித்திரி, கிருஷ்ணவேணி ரமணி, சரத்குமார், அபிராமி உள்பட 26 பேர் காயமடைந்தனர். உடனே காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு நடுக்காவேரி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சேர்க்கப்பட்டனர் அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து நடுக்காவேரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முகமது நிவாஸ், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வேதி தாசன், ஏட்டுகள் வினோத், பாஸ்கள் ஆகியோர் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். இதனிடையே தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முரசொலி எம்பி, துரை சந்திரசேகரன் எம்எல்ஏ ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர்.



