தஞ்சாவூர், செப்டம்பர் 6 –
தமிழ்நாடு கிளையின் ரெட் கிராஸ் சார்பில் தஞ்சாவூரில் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் பயிற்சி முகாம் நடந்தது. முகாமை மாவட்ட ரெட் கிராஸ் தலைவரும் மாவட்ட கலெக்டர்மான பிரியங்கா பங்கஜம் முகாமை தொடங்கி வைத்தார்கள்.
அப்போது அவர் கூறியதாவது: இந்தியன் ரெட் கிராஸ் சங்கம் இரத்த தானம் வழங்குவது பேரிடர் காலங்களில் மக்களுக்கு தேவை யான உதவிகள் செய்வது உள்ளிட்ட பணிகளை சிறப்பாக செய்து வருகிறது. இந்த பணிகளில் ஈடுபட்டு வரும் மாணவ மாணவியர்கள் மக்கள் படும் வேதனைகளை நேரில் பார்வையிட்டு அவற்றை சரி செய்வது மூலம் மாணவ, மாணவர்களிடையே தலைமை பண்பு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார். பயிற்சி முகாமில் ரெட் கிராஸ் சங்க கொள்கைகள், முதலுதவி, பேரிடர் மேலாண்மை, உடல் ஆரோக்கியம், ரத்ததானம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தலைசிறந்த பயிற்றுநர்கள் பயிற்சி வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் ரோஸி, பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் மாணிக்கவாசகம், மாவட்ட ரெட் கிராஸ் வைஸ் சேர்மன் முத்துக்குமார், செயலர் கலைச் செல்வன் பொருளாளர் ஷேக் நாசர், மாவட்ட ரெட்கிராஸ் மூத்த நிர்வாக குழு உறுப்பினரும், யூத்ரெட்கிராஸ் ஆலோசகருமான ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மன்னர்சரபோஜி அரசு கல்லூரி பேராசியரும், மாவட்ட யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் முருகானந்தம் சிறப்பாக செய்திருந்தார்.



