தஞ்சாவூர், ஜூன் 29 –
மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து புதிய தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு சட்ட சபை தீர்மான நகலை எரித்து தஞ்சாவூரில் காவேரி உரிமை மீட்பு குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடக அரசு மிகுதியாக அணை கட்டுவது குறித்து முடிவு செய்ய மத்திய அரசு புதிய தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று தமிழக சட்டசபை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
இந்தத் தீர்மானத்தை ரத்து செய் ய வேண்டும். இந்த தீர்மானம் காவிரியை காவு கொடுக்கும் தீர்மா னம் எனக்கூறி காவிரி உரிமை மீட்பு குழுவினர் தீர்மான நகலை எரிப்பு போராட்டம் நடத்தப் போவ தாக அறிவித்து இருந்தனர். அதன் படி தஞ்சாவூர் பழைய பஸ் நிலை யம் அருகே காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் தமிழக சட்டசபை தீர்மான நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு காவிரி உரிமை மீட்பு குழு ஒருங் கிணைப்பாளர் மணியரசன் தலைமை தாங்கினார்.
பொருளாளர் மணிமொழியன் தமிழ் தேசிய பேரியக்கப் பொதுச் செயலாளர் வெங்கட்ராமன், நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப் பாளர் ஹுமாயூன் கபீர், மணி, செந்தில், தமிழக விவசாயிகள் சங்க மண்டல தலைவர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மேகதாதுவில் அணை கட்டினால் மிகையான வெள்ள நீர் கூட காவிரி தமிழகத் திற்கு வரவிடாமல் தடுத்து விடுவார்கள். எனவே தமிழக சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறி கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தீர்மானத்தின் நகலை தீவைத்து எரித்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். போராட்டத்தில் தமிழர் தேசிய பேரியக்க மாவட்ட செயலாளர் வைகரை, நாம் தமிழர் கட்சி மாநில பொருளாளர் பாரதி செல்வன், இந்திய ஜனநாயக கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சிமியோன் சேவியர் ராஜ் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுந்தர் விமல நாதன் மற்றும் காவிரி உரிமை மீட்பு குழு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



