தக்கலை, ஜூன் 2 –
குளச்சலை அடுத்த கல்லுக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர் மகன் அஸ்வின் (26). இவர் நெய்யூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று இரவு அஸ்வின் மோட்டார் சைக்கிளில் கருங்கல் பகுதிக்கு சென்றுவிட்டு அங்கிருந்து திங்கள்நகர் நோக்கி திரும்பி சென்று கொண்டிருந்தார். திக்கணங்கோடு அருகே வைத்து எதிரே வந்த ஒரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி உள்ளது.
இந்த வித்தில் அஸ்வின் மற்றும் எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். சாலையில் ஆபத்தாக கிடந்த இரண்டு பேரையும் அந்த பகுதியினர் மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரி சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிட்சைக்கு பின்னர் அஸ்வின் மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வழியிலே அஸ்வின் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள் மோதி நர்சிங் மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறைத்து அவரது தாயார் கலா தக்கலை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த விபத்தில் சிக்கிய மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த திக்கணங்கோடு அபினேஷ் (22) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் விபத்தில் காயமடைந்து அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.



