தக்கலை, பிப். 24 –
தக்கலை அருகே உள்ள துண்டத்துவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெயமுருகன் மகன் விக்னேஷ் (21). எம்பிஏ பட்டதாரியான இவர் கடந்த 3 மாதங்களும் முன்பு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு ஆயில் நிறுவனத்தில் வேலை பார்த்தவர் வேலை பிடிக்காமல் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார்.
விக்னேஷ் கல்லூரியில் படிக்கும் போது அவருடன் படித்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவரம் அந்த பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்த போது அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து வந்த விக்னேஷ் காதலியை சந்தித்து அவரை திருமணம் செய்வதற்கு சம்மதத்தை கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த விக்னேஷ் விரத்தி அடைந்து வீட்டு மாடியில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தந்தை ஜெயமுருகன் தக்கலை போலீசில் புகார் செய்தார். போலீசார் உடலை கைப்பற்றி குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசாரிடம் விக்னேஷ் காதலிக்காக எழுதி வைத்துள்ள ஒரு கடிதமும் சிக்கியுள்ளது. மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



