ஈரோடு, ஜூலை 20 –
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் மேசப்பன், செயலாளர் மாரிமுத்து ஆகியோர் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தாயுமானவர் திட்டம் கடந்த ஆட்சியில் வாக்குகளை கவரும் வகையில் கொண்டு வரப்பட்ட கவர்ச்சி திட்டமாகும். இந்த திட்டத்தினால் பொது மக்களுக்கு எந்த பயனும் இல்லை.
நடக்க முடியாதவர்கள், வயோதிகர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் என அடையாளம் காணப்பட்டு இந்த தாயுமானவர் திட்டத்தில் சேர்க்கப்பட்டால் அரசுக்கு நற்பெயர் பெயர் ஏற்படும். ஆனால் அதற்கு மாறாக வசதி மிக்கவர்கள் நன்றாக நடந்து செல்பவர்களை இந்த திட்டத்தில் சேர்த்துள்ளனர். இந்த திட்டத்தினால் பணியாளர்கள் ஏராளமான சிரமங்களை சந்திக்க வேண்டி உள்ளது. பல்வேறு சிரமங்களை மேற்கொள்ளும் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இதில் கருத்தில் கொண்டு தாயுமானவர் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இருப்பினும் திட்டத்தை தொடர வேண்டும் என்று விரும்பினால் முதலமைச்சர் அறிவித்தது போல ரேஷன் பொருட்களை பாக்கெட் செய்து கொடுத்தால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். எனவே இந்த திட்டத்தை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


