கோவை, ஜூன் 10 –
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜெண்ட் சம்மேளனம் சார்பாக டீசல் விலையை குறைக்க கோரி மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்ட சங்கங்களை சேர்ந்த உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில்: மத்திய, மாநில அரசுகள் டீசல் விலையை உயர்த்தியதால் லாரிகளை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாடகை ஏற்றினால் பொதுமக்கள் தலையில் தான் விடியும் என்றும் விலைவாசி உயர்வு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மத்திய மாநில அரசுகள் தலையிட்டு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டுக் கொண்டனர். ஏற்கனவே லாரிகளுக்கு பல்வேறு வரிகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது டீசல் விலை உயர்வால் தொழில் செய்ய முடியாத சூழல் நிலை வருவதாக தெரிவித்தனர்.
இது குறித்து முதலமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளதாகவும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர். இதில் 500க்கும் மேற்ப்பட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜெண்ட் சம்மேளனம் தலைவர் கணேஷ், செயலாளர் காஜா உசேன், பொருளாளர் முகம்மது ரபிக் மற்றும் சங்க நிர்வாகிகள் என ஏராளமனோர் கலந்து கொண்டனர்.



