அருமனை, மே 18 –
அருமனை சந்திப்பில் மதுக்கடையும் அதை சார்ந்த அரசு பாரும் இயங்கி வருகிறது. இது அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் சாலையாக திகழ்கிறது. இது முக்கியமான குறுகிய சாலையாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.
இந்த கடையை அகற்ற கோரி பலமுறை முயற்சி செய்தும் அதை வியாபார விவசாய சங்கம் பல வழிகளில் தடை செய்தது. இது ஜவுளிக்கடை நகை கடை பழக் கடை இறைச்சிக்கடை நிறைந்த இடமாக திகழ்கிறது. இந்த ஒயின்ஷாப் மூடினால் வியாபாரம் பாதிக்கும் என்று வியாபாரிகள் பல வழிகளில் தடுத்தனர்.
இந்த ரோட்டில் சில நாட்களுக்கு முன்னதாக ஒரு குடிமகன் உடம்பில் ஒட்டு துணிகளும் இல்லாமல் முழு நிர்வாணமாக நடந்து செல்லும் காட்சி அனைத்து வலைதளங்களிலும் வந்தது. அனைவரும் பார்த்ததும் உண்மையே. அதனால் பாஜக ஒன்றிய தலைவர் ஹரிஷ் குமார், மாவட்டச் செயலாளர் நந்தினி, கம்யூனிஸ்ட் பொறுப்பாளர்கள், காங்கிரஸ் மற்றும் அனைத்துக் கட்சி பொறுப்பாளர்களும் அதிகமான ஊர் மக்களும் மழை காரணமாக கூடாரம் அமைத்து இந்த கடையில் முன் அமர்ந்து இருக்கிறார்கள்.
இவர்களிடம் காவல் ஆய்வாளர் கமலா தேவி அவர்கள் சமூகப் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவுக்கு வரவில்லை. மாலை ஆறு மணி ஆகியும் சட்டமன்ற உறுப்பினர் மேலும் துறை சார்ந்த அதிகாரிகளோ வராத காரணத்தினால் போராட்டம் நீடித்துக் கொண்டிருக்கிறது.



