கோவை, செப். 29 –
கோவை மாவட்டம் கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை சார்பில் இதய குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் ரன் ஃபார் லிட்டில் ஹார்ட் என்ற விழிப்புணர்வு மாரத்தான் 3-ம் பதிப்பு நடத்தப்பட்டது.
செப்டம்பர் மாதம் குழந்தைகள் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகவும், செப்டம்பர் 29-ம் தேதி உலக இதய தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் இதயக் குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறிந்து உரிய நேரத்தில் சரியான சிகிச்சைகள் அளிப்பதன் மூலம் முற்றிலுமாக அவர்களை குணப்படுத்த இயலும். அதற்கு விழா மிகவும் அவசியம். எனவேதான், பொதுமக்கள், குழந்தைகள் இதய குறைபாடுகள் குறித்து போதிய விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காக கோவை, பாப்பநாயக்கன்பாளையம் மணி மேல்நிலைப் பள்ளியில் இந்த மாரத்தான் நடைபெற்றது. மாரத்தான் கோவை மாவட்ட தடகள சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், மாரத்தானை LMW Lakshmi Mills Co. Ltd மற்றும் Lakster Care Clothing ஆகிய நிறுவனங்களும், கோவை போக்குவரத்து காவல்துறை உதவி ஆணையாளர் திரு கோகுலகிருஷ்ணன், ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி மற்றும் பிற முக்கிய பிரமுகர்களுடன் இணைந்து கொடி அசைத்து மாரத்தான் துவக்கி வைத்தனர்.
மூன்று வெவ்வேறு பிரிவுகளில் இந்த மாரத்தான் நடைபெற்றது. அனைத்து வயதினரும் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க ரூ.75.000 வழங்கப்பட்டது. 2500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஜி கே என் எம் மருத்துவமனையில் புற்றுநோய் மற்றும் இருதய குறைபாடுகளுக்காக சிகிச்சை பெற்று குணமடைந்த குழந்தைகளும் இந்த மரத்தானில் கலந்து கொண்டு ஓடினர் என்பது குறிப்பிடத்தக்கது.



