திருப்பூர், ஜூன் 05 –
திமுக அணுகுமுறை சரியில்லை என்பதே தொண்டர்கள் கருத்தாக உள்ளது. மதிமுக அவைத்தலைவர் அர்ஜுனராஜ் பேட்டி.
தமிழகத்தில் ஜனநாயக புரட்சி ஏற்பட்டுள்ளது. பணநாயகம் தோற்கடிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆட்சி 5 ஆண்டு ஆட்சி செய்ய வேண்டும் என மதிமுக விரும்புகிறது. மதிமுக இனி தங்கள் சின்னத்தில் தான் போட்டியிடுவோம். தேர்தல் சமயத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்வோம்.
எத்தனையோ ஜாம்பவான்கள் போனாலும் இன்றும் மதிமுக உண்மை தொண்டர்கள் எங்களோடு உள்ளார்கள்.திமுக அணுகுமுறை சரியில்லை என தொண்டர்கள் கருத்து உள்ளது என தெரிவித்தார்.



