சேலம், ஜூலை 27 –
சேலம் மாவட்ட பொதுமக்களிடமிந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும், அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பெண்களின் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு அலுவலர்கள் விரைந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென அதிலும் குறிப்பாக பொதுமக்கள் ஒருமுறை வழங்கும் மனுக்கள் மீண்டும் மீண்டும் வராத வகையில் மனுவின் மீது உரிய தீர்வு வழங்கப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்திட அறிவுறுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில் இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 490 மனுக்கள் பெறப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளிகள் வழங்கிய 25 மனுக்கள் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் தெரிவித்தார்.



