கோவை, மே 28 –
2026 சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளுடன் ஆட்சியமைத்து தவெக தற்போது அமைச்சரவை முழுமையாக விரிவுபடுத்தபட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை சூலூர் சட்டமன்ற உறுப்பினர் புதுப்பிக்கப்பட்ட அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார்.
மேலும் கோவை சூலூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் என் எம் சுகுமார் சட்டமன்ற உறுப்பினர் நாற்காலியில் அமர வைத்து வாழ்த்து தெரிவித்தார். அமைச்சர் சம்பத் உடன் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கிரி பிரசாத், கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், கோவை கிழக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகப்பிரியா, சூலூர் வட்டார தலைவர் நவீன்குமார், கோவை கிழக்கு மாவட்ட நிர்வாகி ஆர்.சாந்தாமணி ராமச்சந்திரன் மற்றும் தவெக தொண்டர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



