திருச்சி, ஜூன் 17 –
திருச்சி மாவட்டம் வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆண்டியப்பட்டி கிராமத்தில் மலையாண்டி என்பவர் தனது தோட்டத்தில் குடிசை வீடு அமைத்து குடும்பத்துடன் வசித்து வருகிறார். இன்று காலை 11 மணியளவில் அனைவரும் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றிருந்தபோது, அவர்களது குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிள், இரண்டு சைக்கிள்கள், 12 ஆயிரம் ரொக்கம், வீட்டு ஆவணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என லட்சக்கணக்கில் சேதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.



