நாகர்கோவில், ஜூன் 9 –
குமரி மாவட்ட சமூக பணியாளருக்கு விருது. கோவையில் நடைபெற்ற குடியிருப்போர் விழிப்புணர்வு சங்கம் தனது 20வது ஆண்டு சமூகப் பணி விழாவில், சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவையாற்றிய 35 பேருக்கு சமூக தாக்கச் சாதனையாளர் விருது” வழங்கி கௌரவித்தது.
அதில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சமூகப் பணியாளர் டாக்டர் ஹெச். டார்வின் மோசஸ்-க்கு சமூக மேம்பாடு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகள் அதிகாரப்படுத்தல் துறைகளில் ஆற்றிய பங்களிப்பிற்காக விருது வழங்கப்பட்டது. தனது சிறப்பான சமூக சேவைக்கான வழங்கப்பட்ட விருதினை அவர் பெற்றுக் கொண்டார்.



