சுசீந்திரம், ஜூலை 17 –
சுசீந்திரம் தாணுமாய சுவாமி கோவிலில் வருடம் தோறும் ஆடி மாதம் தாணுமாலய சுவாமிக்கும் திருவேங்கட விண்ணவரம் பெருமாளுக்கும் களப பூஜை நடைபெறுவது வழக்கம். அது போல இந்த ஆண்டு ஆடி மாத களப பூஜை நாளை சனிக்கிழமை தொடங்கி வருகிற 30ம் தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது.
இதை ஒட்டி தினமும் காலை 10 மணிக்கு திருவேங்கட விண்ணவரம் பெருமாள் ஆகிய உற்சவமூர்த்திக்கும் அதனைத் தொடர்ந்து தாணுமாய சுவாமிக்கும் களப பூஜை நடைபெறும். பூஜையை மாத்தூர் மடம் தந்தி சுஜித் நாராயண ரூ தலைமையில் தந்திரிமார்கள் செய்கிறார்கள். பின்னர் கோவிலை சுற்றிலும் நாலு முறை ஸ்ரீபலி வழிபாடும் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் களபம் வழங்கப்படும். நிறைவு நாளான 30ம் தேதி நீலகண்ட விநாயகர் சன்னதி அருகில் உதய அஸ்தமன பூஜை நடைபெறும்.
இதனை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு கற்கடக ஸ்ரீ பலி விழா நடக்கிறது. இதை ஒட்டி கோவிலில் ரிஷப வாகனத்தில் சிவனும் கருட வாகனத்தில் பெருமாளும் இருக்கும்படி அமரச் செய்து மேளதாளங்கள் முழங்க மூன்று முறை ஸ்ரீ பலி வழிபாடு நடைபெற்றது.


