சுசீந்திரம், மே 28 –
சுசீந்திரம் காவல் உதவி ஆய்வாளர் தனிஷ் லியோன் தலைமையில் போலீசார் தெங்கம்புதூர் பகுதியில் சோதனை மேற்கொள்ளும் போது தெங்கம்புதூர் காமராஜர் சிலையின் பின்பு சந்தேகப்படும்படி நின்ற நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் புத்தளம் பகுதியைச் சார்ந்த ரெஜி குமார் (32) என்பதும் அவர் அரசு சட்டத்திற்கு புறம்பாக அதிக லாப நோக்கத்தோடு விற்பனைக்காக வைத்திருந்த 180 மில்லி அளவு கொண்ட 26 மது பாட்டில்கள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்து கைது செய்து சுசீந்திரம் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதுபோல தெங்கம்புதூர் சாஸ்தான்கோவில் பகுதியில் ரோந்து பணி மேற்கொள்ளும் போது சந்தேகம் படும்படி நின்ற நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் தெங்கம்புதூர் சாஸ்தான்கோவில் பகுதியில் வசிக்கும் கண்ணன் (45) என்பதும் அதிக லாப நோக்கத்தோடு விற்பனைக்காக வைத்திருந்த 180 மில்லி அளவு கொண்ட 26 மது பாட்டில்களையும் கண்ணனையும் கைது செய்து சுசிந்திரம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தெங்கம்புதூர் அருகே உள்ள புத்தளம் பகுதியில் ரோந்து பணி மேற்கொள்ளும் போது சந்தேகப்படும்படி நின்ற நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் புத்தளம் உசரவிளை பகுதியைச் சார்ந்த சுதர்சன் (31) என்பதும் இவர் அதிக லாப நோக்கத்தோடு தனது இருசக்கர வாகனத்தில் வெள்ளை சாக்கில் விற்பனைக்காக வைத்திருந்தவரை பிடிக்க முற்படும்போது 180 மில்லி எடை கொண்ட 50 மது பாட்டில்களை சாக்கு பையோடு வைத்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்று விட்டார். 50 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


