கோவை, ஜன. 30 –
கோவை மாவட்டம் மதுக்கரை காவல் நிலைய பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு சக்திவேல் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக செல்வராஜ் மகன் சுரேஷ் (44) என்ற நபர் மீது மதுக்கரை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இவ்வழக்கின் விசாரணை கோவை ஐந்தாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குற்றவாளி சுரேஷ் (44) என்பவருக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ 5,500/- அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன் விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற சிறப்பு உதவி ஆய்வாளர் ஆனந்த் குமார் ஆகியோரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பாராட்டினார்.



