களியக்காவிளை, ஏப். 21 –
குழித்துறை அருகே பரமன்தலை புத்தன் வீட்டை சார்ந்த கண்டன் மகள் நிஷா (19). இவருக்கு திருமணமாகி 4 மாதங்கள் ஆகியுள்ளது. இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் மன வேதனை அடைந்த நிஷா தனது தகப்பனார் வீட்டில் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று நிஷா கணவரை தொடர்பு கொள்ள போன் செய்துள்ளார். ஆனால் கணவர் போன் எடுக்காமல், சுவிட்ச் ஆப் செய்துள்ளார். இதனால் வேதனையடைந்த நிஷா இரவு வீட்டின் மேல் மாடிக்கு சென்று சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்த தாயார் மகளை காப்பாற்றும் பொருட்டு சாரியை அவிழ்த்து கீழே இறக்கி ஆம்புலன்ஸ் முலம் குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே நிஷா இறந்ததாக கூறியுள்ளார். ஆகவே சடலத்தை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விசாரணை முடிந்து பிரேத பரிசோதனை முடிந்த பிறகு சடலத்தை ஒப்படைக்க உள்ளனர். இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



