மார்த்தாண்டம், அக். 14 –
குழித்துறை தபால் நிலைய சந்திப்பில் உள்ள பழமை வாய்ந்த வீரன் வேலுதம்பி தளவாய் திடல் வண்ண வடிவமைப்பில் புனரமைக்கப்பட்டது. குழித்துறை தபால் நிலையம் சந்திப்பில் பழமை வாய்ந்த வேலுத்தம்பி தளவாய் திடல் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைவதற்கு முன்பே இந்த திடல் வேலுத்தம்பி திடல் என்று அழைக்கப்படுகிறது.
நகரப் பகுதி அழகு படுத்தும் திட்டத்தின் கீழ் இந்தத் திடலில் உள்ள கிணற்றின் மேல் பகுதி அன்னபறவை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதைப்போல் பொதுமக்கள் உட்காருவதற்காக இருக்கை வசதி, சுற்றி சில்வர் கைப்பிடி, தரைத்தளம் கருங்கல் கிரானைட், இடைப்பட்ட பகுதியில் புல் மற்றும் முழுமையான வண்ண மயமான மின்விளக்கு வசதி, பெயர் பலகை போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இதை குழித்துறை நகராட்சி சேர்மன் பொன் ஆசை தம்பி திறந்து வைத்தார். இன்ஜினியர் குரல் செல்வி, மானேஜர் சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் ஆட்லின் கெனில், பிஜு, லலிதா, மினி குமாரி, ஜெயலஷ்மி, அருள், ரோஸ்லெட், ஜெயந்தி, அதிமுக எம் ஜி ஆர் மன்ற மாவட்ட தலைவர் ஜெயச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



