குளச்சல், நவ. 12 –
குமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் பாரதி தலைமையில், ஓட்டுனர் ஜாண்பிரைட் மற்றும் பறக்கும் படை குழுவினர் குளச்சல் அருகே அதிகாலை 2.30 மணியளவில் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது கேரளா பதிவெண் கொண்ட சொகுசு கார் சந்தேகத்திடமாக வந்து கொண்டு இருந்தது. அதனை நிறுத்தும் படி சைகை காட்டிய போதிலும் கார் நிற்காமல் சென்றதால் துரத்தி மடக்கி பிடித்தனர். உடனடி கார் ஓட்டுனர் தப்பி ஓடிவிட்டார். தொடர்ந்து அதிகாரிகள் வாகனத்தை சோதனை செய்ததில் சுமார் 2000 கிலோ பொது வினியோக திட்ட அரிசி இருந்தது. இதை கேரளா மாநிலத்திற்கு கடத்தி செல்ல இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து குளச்சல் வாட்டர் டாங்க் அருகில் சுமார் 500 கிலோ பொது வினியோக திட்ட அரிசி காருடன் கண்டு பிடிக்கப்பட்டது. மேற்படி இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பொது வினியோக திட்ட அரிசியை கோணம், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபகழக கிட்டங்கில் ஒப்படைக்கப்பட்டது. கடத்தல் வாகனம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது. கடத்தல் வாகன உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க பட்டு வருகிறது.



