By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி : வெளிநாடு வாழ் இளைஞரிடம் பெண் பேஸ்புக் கணக்கில் பல லட்சம் மோசடி: தற்கொலை செய்த இளைஞர்: சைபர் கிரைம் போலீசார் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி : வெளிநாடு வாழ் இளைஞரிடம் பெண் பேஸ்புக் கணக்கில் பல லட்சம் மோசடி: தற்கொலை செய்த இளைஞர்: சைபர் கிரைம் போலீசார் விசாரணை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி : வெளிநாடு வாழ் இளைஞரிடம் பெண் பேஸ்புக் கணக்கில் பல லட்சம் மோசடி: தற்கொலை செய்த இளைஞர்: சைபர் கிரைம் போலீசார் விசாரணை

Last updated: June 6, 2026 7:13 pm
June 6, 2026
37 Views
Share
SHARE


மார்த்தாண்டம், ஜூன் 6 –

மார்த்தாண்டம் அருகே பளுகல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணிவிளை அருகே புரவூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் குமார் (44). இவர் 12 வருடங்களுக்கு முன்பு விஷ்ணு பிரியா என்ற பெண்ணுடன் திருமணமானது. ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். சதீஷ்குமார் 15 வருடங்கள் சவுதி அரேபியா நாட்டிலும், தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக துபாய் நாட்டிலும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் தேவிகா எஸ் நாயர் என்ற பெயரில் பெண்ணின் புகைப்படம் வைத்திருக்கும் முகநூல் பக்கத்தில் இருந்து பிரெண்ட் ரக்வெஸ்ட் வந்துள்ளது. அது மூலம் நட்பாக சாட்டிங் ஆரம்பித்து நாள் செல்ல செல்ல காதலும், காமமும் கலந்த சாட்டிங் இருவருக்குமிடையே பரிமாற தொடங்கியது. ஒரு கட்டத்தில் மறுபுறம் தேவிகா எஸ் நாயர் என்ற பெயரில் இருந்த நபர் சாட்டிங் ஹிஸ்டரியை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சதீஷ் குமாருக்கு அனுப்பி வைத்து பணம் கேட்க தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. பல கட்டங்களாக வெளிநாட்டில் இருந்து கொண்டு சதீஷ் குமார் கேட்கும் போதெல்லாம் பணம் (சட்ட விரோத பணப்பரிவர்த்தனை முறையில்) பணத்தை அனுப்பி கொண்டே இருந்தார்.

இந்நிலையில் திடீரென முன் பின் தெரியாத கேரளா மாநிலம் ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்த ராஜீவ் என்பவர் ஒரு எண்ணில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்து, தேவிகா எஸ் நாயர் என்ற முகநூல் மூலம் இருவரும் சாட்டிங் செய்த ஹிஸ்டரியை ஸ்க்ரீன் ஷாட் ஆக சதீஷ் குமாரின் நண்பர்கள் பலருக்கும் அனுப்பி வைத்துள்ளார். மேலும் சதீஷ் குமாரின் மனைவி விஷ்ணு பிரியாவுக்கும் வாட்ஸ்அப் மூலமாகவும் நேரடியாகவும் தெரியப்படுத்தாக தெரிகிறது. இதனை தொடர்ந்து சதீஷ் மற்றும் மனைவி விஷ்ணு பிரியா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விஷ்ணு பிரியா கணவன் சதீஷ் தொடர்பை துண்டித்து இரு குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதனால் துபாயில் இருந்து கடந்த ஏப்ரல் 24ம் தேதி ஊர் திரும்பிய சதீஷ் குமார் மனைவியிடம் சென்று சமாதானம் செய்ய பலமுறை முயன்றுள்ளார். ஆனால் மனைவி கணவன் சதீசை பார்க்கவோ பேசவோ விரும்பாத நிலையில் மிகுந்த மன அழுத்தம் மற்றும் அவமானத்தால் கடந்த மே 17 ம் தேதி புதிதாக தான் கட்டி குடும்பத்துடன் குடியேறிய சொந்த வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை தொடர்ந்து தற்போது தேவிகா எஸ் நாயர் என்ற முகநூல் பக்கம் டெலிட் செய்த மர்ம கும்பல் ராஜீவ் என்ற பெயரில் தொடர்பு கொண்ட மொபைல் எண்ணையும் சுவிட்ச் ஆஃப் செய்து தலைமறைவாகி உள்ளனர்.

இந்நிலையில் சதீஷ் குமாரின் தாய் பளுகல் காவல் நிலையம், கன்னியாகுமாரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சைபர் பிரிவு போலீசாரிடம் புகார் அளித்து மகனின் மரணத்திற்கு காரணமாக இருந்த மர்ம கும்பலை கண்டு பிடித்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என புகார் அளித்து தீர்வுக்காக காத்திருக்கிறார்.

பெண் பெயரில் போலி முகநூல் பக்கம் உருவாக்கி இளைஞரை தங்களது வலையில் சிக்க வைத்து பல லட்சம் ரூபாய் பணம் பறித்த பின்பு தற்கொலைக்கு தூண்டி உயிரையும் பறித்து ஒரு குடும்பத்தையே நிர்கதியாக்கி விட்டு தலைமறைவான மர்ம கும்பல் மீது போலீஸ் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தக்கலை அருகே விபத்தில் காயமடைந்த கோர்ட் ஊழியர் சாவு
அரசியல் கட்சிகளை போல் அய்யா வழியை கவர்னர்
மழைக்கால பேரிடர்களை எதிர்கொள்வது குறித்த ஆய்வு கூட்டம். அமைச்சர் புஸ்சி என்.ஆனந்த் பங்கேற்பு
அஞ்சல் வார விழாவை ஒட்டி நாகர்கோவிலில் பேரணி
வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை பின்பற்றாத மத்திய அரசை கண்டித்து மார்ச் 3ம் தேதி மத்தி ய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் – மாநாட்டில் தி.க. தலைவர் கி.வீரமணி அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரியில் காவலர் வீர வணக்க நாள்

October 22, 2025
53 Views
சிவகங்கை பேருந்து நிலைய விரிவாக்கப் பணி
ஓடும் பஸ்ஸில் மூதாட்டியின் 7 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
இந்தியை தினிக்கதே எதிர்ப்பு திமுக போராட்டம்
தக்கலையில் பள்ளி மாணவி உட்பட 5 பேரை கடித்த தெரு நாய்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account