நாகர்கோவில், ஏப். 1 –
இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் 23.04.2026 அன்று நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி பொது பார்வையாளர் பிரியங்கா பாசு பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலமோர் எஸ்ட்டேட் பகுதியில் அமைந்துள்ள மறைமுக வாக்குச்சாவடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பாலமோர் வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து கலந்துரையாடினார். வாக்குரிமை பெற்ற அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கி கேட்டுக்கொள்ளப்பட்டது.
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் சுபஸ்ரீ நந்தா, தொகுதிக்குட்பட்ட குமாரபுரம், தோப்பூர் மற்றும் ராஜாவூர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கன்னியாகுமரி முக்கோண பூங்காவில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் வரும் ஏப்ரல் 23ம் தேதி வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் விழிப்புணர்வு செல்பி பாயிண்டில் சுற்றுலா பயணிகளுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.
நாகர்கோவில் மற்றும் குளச்சல் சட்டமன்ற தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் சரண் ஜோஸ் மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் செயல்பாட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அவர் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செண்பகராமன்புதூர் பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈட்டுபட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பதிவேடுகளை பார்வையிட்டார்.



