By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாவட்டத்திற்குட்பட்ட சுற்றுலா தலங்களில் கலெக்டர், அமைச்சர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்டத்திற்குட்பட்ட சுற்றுலா தலங்களில் கலெக்டர், அமைச்சர் ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி மாவட்டத்திற்குட்பட்ட சுற்றுலா தலங்களில் கலெக்டர், அமைச்சர் ஆய்வு

Last updated: June 13, 2026 6:24 pm
June 13, 2026
23 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 13 –

கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத்துறை, நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி முகமை, பேரூராட்சிகள் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில், மாவட்டத்திற்குட்பட்ட சுற்றுலா தலங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை ஆய்வு செய்யும் பணி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சி தலைவர் பிரதாப் தலைமையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் பார்வையிட்டார்.

அருவிக்கரை ஆற்றின் குறுக்கே கம்பி வடம் ஊர்தி (ரோப் கார்) அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டு ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாத்தூர் தொட்டிபாலம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு, தொட்டிபாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சிறுவர் பூங்காவினை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளுக்கு கழிப்பறை வசதி, சுத்தமான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் திற்பரப்பு பேரூராட்சிக்குட்பட்ட திற்பரப்பு அருவியின் கரையோரம் ரூ.4.30 கோடி மதிப்பில் பல்நோக்கு வளாகம், பெண்கள் உடை மாற்றும் அறை மற்றும் பூங்கா மேம்பாடு உள்ளிட்ட பணிகளை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் சிற்றார் அணை பகுதியில் ரூ.3.40 கோடி மதிப்பில் படகுதளம், படகு போக்குவரத்து, உணவகம், வாகனங்கள் நிறுத்திமிடம், ஓய்வு கூடாரம் அமைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இரட்டை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வசதி ஏற்படுத்தி பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கும் ஒப்பந்ததாரருக்கும் அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது: அண்டை மாநிலமான கேரளாவில் சுற்றுலாத்துறைக்கு அதிக நிதியும், அதன் மூலம் அதிக வருவாயும் கிடைக்கிறது. அதேபோன்று நமது கன்னியாகுமரி மாவட்டத்திலும் சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளது. தற்போது மாத்தூர் தொட்டிப்பாலத்தில் மட்டும் ரூ.3.25 கோடி மதிப்பில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றது. ஊரக உள்ளாட்சி மற்றும் பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து, அடுத்த பட்ஜெட்டில் கூடுதல் திட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நீர் வள ஆதாரத்துறையின் கீழ் வரும் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் முறையாக அடையாளம் காணப்பட்டு அங்குள்ள மக்களுக்கு முன்னரே உரிய அறிவிப்பு வழங்கப்பட்டு, சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பெருந்தலைவர் காமராசர் காலத்தில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாத்தூர் தொட்டிப்பாலம் கட்டப்பட்டது. நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதே இங்கு காமராஜரின் திருவுருவச் சிலை அமைக்க வேண்டும் எனப் பலமுறை சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளேன். தற்போது சுற்றுலாத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளதால், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, வரும் காலங்களில் இங்கு நிச்சயம் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், இப்பகுதியில் நில எல்லைகளைத் துல்லியமாக வரையறை செய்வது உள்ளிட்ட பொதுமக்களின் இதர கோரிக்கைகளையும், உள்ளூர் சட்டமன்ற உறுப்பினரின் மூலம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார்.

நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.செல்லசுவாமி (பத்மநாபபரம்) ,ற்.றி.பிரவின் (விளவங்கோடு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி ஆட்சியர் (பயிற்சி) மோனிகா, மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், நீர்வளத்துறை செயற்பொறியாளர் வசந்தி, உதவி செயற்பொறியாளர் ரமேஷ், உதவி பொறியாளர் விஜில் சிங், திருவட்டார் வட்டாட்சியர் மரகதவல்லி, உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், ஒப்பந்ததார்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

பஸ்ஸிலிருந்து இறங்கிய வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு
சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் மாசி திருக்கல்யாண திருவிழா தொடங்கியது
குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நிமிர் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்
புதிதாக கான்கிரீட் தளம் அமைப்பதற்கான பணி
ஈரோடு டெக்ஸ் வேலியில் ரூ.50 கோடி மதிப்பில் டைட்டல் பார்க் அடிக்கல் நாட்டு விழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் தொடங்கி வைக்கிறார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

கடையநல்லூர் பிரதமர் மோடி படம் அகற்றம்

April 7, 2025
54 Views
ஆரல்வாய்மொழி அருகே பூ வியாபாரிக்கு கத்தரிக்கோல் குத்து: 3 பேர் மீது வழக்கு
மார்த்தாண்டம் அருகே வக்கீல் மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு
ஆட்டோ தொ.மு.ச உறுப்பினர் அட்டை
குளச்சலில் பெண்ணின் ஆடையை கத்தரித்து பாலியல் சீண்டல்; சைக்கோ வாலிபர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account