நாகர்கோவில், ஜூலை 24 –
கன்னியாகுமரி மாவட்ட மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தாட்கோ ஆகியவற்றின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தடிக்காரன்கோணம் ஊராட்சிக்குட்பட்ட வாழையத்துவயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி தாட்கோவின் சார்பில் நாபர்டு திட்டத்தின் கீழ் ரூ.2.26 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆறு வகுப்பறைகள் மற்றும் ஆய்வுக்கூடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்தோடு, பணிகளை விரைந்து முடித்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் இப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்களின் பல்வேறு கோரிக்கைகள் கேட்டறியப்பட்டது. அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து தடிக்காரன்கோணம் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளாம்பி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுக்கு கற்பிக்கும் முறை மற்றும் வழங்கப்படும் உணவுகள் குறித்து பணியாளர்களிடம் கேட்டறியப்பட்டது. மகளிர் திட்டத்தின் கீழ் 13 சுயஉதவிக்குழுவினருக்கு கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, தையல் ஆயத்த ஆடையகம், மாவு வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு தொழில் தொடங்குவதற்கான ரூ.9 இலட்சம் மதிப்பில் கடன் உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் சுயஉதவி குழுவினரால் அமைக்கப்பட்டிருந்த நல்ல மிளகு, கிராம்பு உள்ளிட்ட நறுமண மரக்கன்றுகளை நேரில் பார்வையிட்டதோடு, பயன்கள் குறித்து கேட்டறியப்பட்டது. இப்பொருட்களை உலக அளவில் சந்தைப்படுத்த மகளிர் திட்ட திட்ட இயக்குனருக்கு அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து மலைவாழ் சுயஉதவிக்குழுவினரின் கைவினைப்பொருட்களை நேரில் பார்வையிடப்பட்டது. அருமநல்லூர் பகுதியில் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் கட்டடப்பணிகளை நேரில் பார்வையிடப்பட்டது. நடைபெற்ற ஆய்வில் மகளிர் திட்ட திட்ட இயக்குநர் பத்ஹூ முகம்மது நசீர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துறை அலுவலர்கள், மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



