கருங்கல், ஆக. 18 –
சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிள்ளியூர் மற்றும் முஞ்சிறை ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் உள்ள பழுதடைந்த பல சாலைகளை முன்னுரிமை வழங்கி சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையின் பேரில் தற்போது கீழ்காணும் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய 12 சாலைகளை சீரமைக்க முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடியே 63 லட்சத்து 65 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன் பேரில் பாலூர் ஊராட்சிக்குட்பட்ட பூட்டேற்றி சால்வேஷன் ஆர்மி சர்ச் முதல் கோட்டவிளை சாலை 27.45 லட்சம், பைங்குளம் ஊராட்சிக்குட்பட்ட முள்ளுவிளை – மணியாரம் குன்று சாலை 26.70 லட்சம், நடைக்காவு ஊராட்சிக்குட்பட்ட கன்னங்கரை முதல் கொட்டைக்காடு – கொல்லம்விளை சாலை 22.35 லட்சம், நடைக்காவு ஊராட்சிக்குட்பட்ட அடையாமடை மாடன்தரை முதல் வைத்தியசாலை செல்லும் சாலை ரூ.21.14 லட்சம், நடைக்காவு ஊராட்சிக்குட்பட்ட அருள்குன்று – தோப்பு சாலை ரூ.18.65 லட்சம், நடைக்காவு ஊராட்சிக்குட்பட்ட மேலமணலி – மேலோட்டுவிளை சாலை ரூ.28.60 லட்சம், அடைக்காகுழி ஊராட்சிக்குட்பட்ட பிறாக்கோடு – பீலிகுளம் சாலை ரூ.73.75 லட்சம், வாவறை ஊராட்சிக்குட்பட்ட கல்லாசரிவிளை – வாவறை சர்ச் சாலை ரூ. 27.47 லட்சம், வாவறை ஊராட்சிக்குட்பட்ட ஒலியபுறம் – கரக்கான்குழி சாலை ரூ. 16.65 லட்சம், வாவறை ஊராட்சிக்குட்பட்ட மாமுகம் – இஞ்சிபறம்பு சாலை ரூ. 26.43 லட்சம், மங்காடு ஊராட்சிக்குட்பட்ட கீழக்கரிக்கல் – புதுக்குளம் – மங்காடு சாலை ரூ. 43.66 லட்சம், மெதுகும்மல் ஊராட்சிக்குட்பட்ட தையாலுமூடு – அன்னிக்கரை – துண்டுவிளை சாலை ரூ. 30.80 லட்சமும் என கிள்ளியூர் தொகுதியில் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய 12 சாலைகளை சீரமைக்க முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடியே 63 லட்சத்து 65 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த சாலைகள் அனைத்தும் விரைவில் பணிகள் துவங்கி சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



