கிருஷ்ணகிரி, பிப். 18 –
கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகே பாஜக பட்டியலின அணி சார்பாக மாவட்டத் தலைவர் கே.சண்முகம் தலைமையில், பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் கவியரசு மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் சிவப்பிரகாசம் ஆகியோர் முன்னிலையில் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கல்வியாளர் பிரிவு மாநில அமைப்பாளர் நந்தகுமார் பட்டியல் அணி கோட்ட பொறுப்பாளர் சிவராமன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பட்டியல் பழங்குடியின் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் நலத்திட்ட உதவிகளை மற்ற திட்டங்களுக்கு திசை திருப்பியதையும், இட ஒதுக்கீட்டு உரிமைகளை மதிக்காமல் ஆட்சி நடத்தும் திமுக அரசை கண்டித்து பட்டியல் அணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மகளிர் அணி தலைவிகளான சிலம்பொழி, சரண்யா, நகர தலைவர் விமலா, மாநில பொதுக்குழு உறுப்பினர் திருமலைபெருமாள், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஆன எம்.ஆர்.ராஜேந்திரன், முருகேசன், சுமதி, மாவட்ட பொருளாளர் ராணா, எஸ்சி அணி முன்னாள் மாவட்ட தலைவர் ஆர் கே ரவி, பட்டியலின நகர தலைவர் கலையரசன், மாவட்டச் செயலாளர் ராமன், கோவிந்தன், பிரகாசம், மாவட்ட துணைத் தலைவர்களான சிவக்குமார், தாமோதரன், சுந்தரமூர்த்தி, ஊத்தங்கரை தொகுதி பொறுப்பாளர் சி கே சங்கர், கூட்டணி கட்சிகளான அதிமுக நகர செயலாளர் கேசவன், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மோகன்ராம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சேர்ந்த பழனிகுமார், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், அதிமுகவை சேர்ந்த கார்த்திக்பால்ராஜ், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஆஜி, ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ராகுல், மாணவர் அணி மாவட்ட செயலாளர் எம் எஸ் குரு, அதிமுக ஐடி விங் மாவட்ட இணைச் செயலாளர் சந்துரு, நிர்மல், குமரவேல், உட்பட 200க்கும் மேற்பட்ட பாஜக கட்சியினர் பங்கேற்றிருந்தனர். போராட்டத்தின் போது திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. கிருஷ்ணகிரி போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.



