கிருஷ்ணகிரி, ஜூன் 23 –
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட மணவாரனப்பள்ளி கிராமத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மற்றும் சமூக அமைப்புகளுடான
பெண் குழந்தைகளுக்கான சிறப்பு கிராம சபை விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
கிராமிய பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
செந்தில் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வுக் கூட்டதிற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி சக்தி சுபாசினி கலந்து கொண்டு
குழந்தைகளின் உரிமைகள் குறித்தும், பெண் கல்வியின் முக்கியதுவம் குறித்தும், குழந்தை திருமணங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மருத்துவம், சுகாதாரம் மற்றும்
குழந்தை திருமணம் ஆகிய தலைப்புகளில் விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்.
மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்சியில் மணவார்னபள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 30 பேர் பங்கேற்று பலனடைந்தனர். இறுதியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது பள்ளியின் தலைமை ஆசிரியர் வீரமணி வழக்கறிஞர் மணவார்ணப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம், ஆர்.பி.எஸ்.கே, மருத்துவர் விஜயலட்சுமி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



