சுசீந்திரம், ஜூலை 24 –
பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் வைத்த தமிழக முதலமைச்சருக்கு குமரி மாவட்ட இந்து நாடார் சங்கம் சார்பில் நன்றி
குமரி மாவட்ட இந்து நாடார் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் உள்ள ஏழை மாணவர்கள் கல்வியில் உயர்வு பெற வசதியாக பள்ளிக்கு கல்வி கற்க வரும் மாணவர்களுக்கு பசியாற மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்து மாணவர்கள் அறிவு பசியையும் வயிற்றுப் பசியையும் தீர்த்து வைத்த அருட்கொடையாளர் ஆவார்.
தமிழ்நாட்டில் இன்றைய கல்வி ஏற்றம் பெருந்தலைவர் காமராஜர் அன்று விதைத்த கல்வியோடு கூடிய மதிய உணவு திட்டம் முழு காரணம் என்றால் அது மிகையாகாது. மதிய உணவு திட்டத்தின் விரிவாக்கமான 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை 35 இலட்சம் மாணவ- மாணவியர்கள் பயனடையும் விதமாக விரிவுபடுத்தி அத்திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்டியுள்ள தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு குமரி மாவட்ட இந்து நாடார் சங்கம் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


