நாகர்கோவில், மே 1 –
புதுக்கடை அருகே உள்ள காப்புக்காட்டில் பிறந்தவர் தொல்காப்பியர். இவருடைய இயற்பெயர் திரணதூமாக்கினியார். சமதக்கினி முனிவரின் புதல்வர் என்றும் சிலர் கூறுகின்றனர். இவர்
தொல்காப்பியம் என்னும் தமிழ் இலக்கண நூலின் ஆசிரியர். தொல்காப்பியர் வாழ்ந்த காலம் துல்லியமாகத் தெரியவில்லை. ஆனால் பதஞ்சலி முனிவர் (கி.மு. 200) காலத்தினும் முற்பட்டவர் என கருதுகின்றனர்.
அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட தமிழ்வளர்ச்சித்துறை மற்றும் தொல்காப்பியர் அறக்கட்டளையின் சார்பில், தொல்காப்பியர் 2737- வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா ந காப்புக்காடு பகுதியில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் போதுமணி, தொல்காப்பியர் அறக்கட்டளை தலைவர் மு.பாஸ்கரன், தொல்காப்பியர் அறக்கட்டளை நிர்வாகிகள் ஷோபா, புஷ்பலதா, ஜெ.சுபகலா, நா.ரெவிந்திரன், பி.கே.சிந்துகுமார், சுரேஷ், புலவர்.கு.இரவீந்திரன், ஷஞ்சய் ஷாலஜி, பேராசிரியர் சவீவ், அம்பை தமிழ் இலக்கிய பேரவை புலவர் நீ.ஐயப்பன், ஜோணி அமிர்த ஜோஸ், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



