சுசீந்திரம், ஜுலை 7 –
பூதப்பாண்டி அருகே உள்ள நாவல்காடு பகுதியை சேர்ந்தவர் ஈசாக்கு இவரது மகன் ஜெபின் (29). இவர் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள டெரிக் பைக் ஷோரூமில் சர்வீஸ் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று (05-07-2026) இவர் மருங்கூரில் உள்ள திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீட்டிற்கு செல்வதற்கு வேண்டி அவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் அவருடைய நண்பர் கடுக்கரை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அமர்நாத் (23) என்பவரை அமர வைத்து இவர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தார்.
மருங்கூரில் இருந்து குலசேகரன்புதூர் செல்லும் ரோட்டில் சங்கரன்புதூர் பகுதியில் வந்து கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக இவரது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ஜெபினுக்கு தலை,முகம், மார்பில் பலத்த காயம் ஏறபட்டிருந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சையில் இருந்த ஜெபின் அன்று இரவே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.
இது குறித்து ஜெபினின் தந்தை ஈசாக்கு சுசீந்திரம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் தனீஷ் லியோன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


