கிருஷ்ணகிரி, ஜூலை 8 –
தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை நாடு முழுவதும் ஒரு வாரம் சிறப்பாக கொண்டாட வேண்டும் என அறிவித்துள்ளார். அவரின் ஆணையின் படி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கோபிநாத் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.சி.ரகு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு திருவண்ணாமலை முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வருகின்ற 15-ம் தேதி நாடு முழுவதும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளினை வெகு விமர்ச்சியாக கொண்டாடப்பட வேண்டும் என்று வழியுறுத்தினார்.
மேலும் இக்கூட்டத்தினைத் தொடர்ந்து பெருந்தலைவர் காமராஜர் 1954ல் முதல் முதலில் குடியாத்தம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ளதை கொண்டாடப்பட உள்ள இந்த விழவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து காங்கிரஸ் நாடளுமன்ற உறுப்பினர் கோபிநாத் தலைமையில் பெருந்திரளாக காங்கிரஸ் கட்சியினர் கலந்துக் கொள்வது, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாக்கூர் அறிவித்துள்ளதின்படி பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளினை கிருஷ்ணகிரி மாவட்டதில் ஒருவாரம் சிறப்பாக கொண்டாட வேண்டும் உள்ளிட்ட
பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏகாம்பாவாணன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, நாராயண மூர்த்தி, கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பி.சி.சேகர் சேலம் மண்டல ரயில்வே கோட்ட உறுப்பினர் ரஹ்மத்துல்லா மற்றும் காங்கிரஸ் கட்சி சேர்ந்த வாஜித் பாஷா, முன்னாள் காங்கிரஸ் தலைவர் தி.க ராமன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.



