மார்த்தாண்டம், ஆக. 27 –
குமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் ஏராளமான தனியார் ரப்பர் தோட்டங்கள் உள்ளன. இதில் களியல் அருகே கட்டச்சல் பகுதியில் உள்ள தனியார் ரப்பர் தோட்டத்தின் உள் பகுதியல் அமைக்கபட்டுள்ள ரப்பர் சீட் உலர் கூடத்தில் நேற்று மாலை திடீரென தீ பற்றி மளமளவென பயங்கர கரும்புகையுடன் எரிய துவங்கியது. இங்கு பணியாற்றிய 10-த்திற்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தொடர்ந்து குலசேகரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கபட்டு சம்பவத்திற்கு வந்த தீ அணைப்பு துறையினர் தீயை அணைக்க ஒரு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ரூ. 50 லட்சம் ரூபாய்க்கு மேலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானதாக தெரிய வருகிறது. சம்பவ இடத்திற்கு வந்த களியல் போலீசார் தீ விபத்து காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



