தென்தாமரைகுளம், மே 25 –
தென் தாமரைகுளம் அருகே உள்ள அண்டி விளை பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (37). இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சொந்தமான வீட்டில் உறவினரான பாலகிருஷ்ணன் என்பவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டில் வேலைக்கு செல்லும் போது இரண்டு வருடத்தில் திரும்பவந்து விடுவேன் என கூறி அவரது மனைவி மற்றும் குழந்தைகளை தங்கவைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. பாலகிருஷ்ணன் உறவினர் என்பதால் அவரது குடும்பத்தை அந்த வீட்டில் தங்க சம்மதித்துள்ளார் அரவிந்த்.
இந்தநிலையில் அரவிந்தின் சொந்த பயன்பாட்டிற்காக வீட்டை திரும்ப கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன் வெளிநாட்டில் இருந்து செல்போனில் அரவிந்தை தொடர்பு கொண்டு ஆபாசமாக திட்டியுள்ளார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இது குறித்து அரவிந்த் தென் தாமரைகுளம் காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது தந்தை அய்யா துரை ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


