களியக்காவிளை, ஏப். 1 –
களியக்காவிளை போலீசார் இன்று களியக்காவிளை பேருந்து நிலையம் அருகாமையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை மடக்கி சோதனை செய்தபோது அதில் 26 பாட்டில் மதுபானம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மதுபானத்தை பறிமுதல் செய்த போலீசார் கேரளா மாநிலம் பாறசாலை, இஞ்சிவிளை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஷமீர் (39) என்பவரை கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.



