களியக்காவிளை, அக். 13 –
களியக்காவிளையில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். களியக்காவிளை போலீசார் கோழிவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டு இருந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் நூறு கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. கோழி விளை எஸ்.எல் ஆர் கேம்பு பகுதியை சார்ந்த சிதம்பரம் மகன் லோக ரூபன் (28) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த நூறு கிராம் கஞ்சா பொட்டலங்ககளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



