தென்தாமரைகுளம், ஜூலை 16 –
களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சமூகப் பணித்துறையின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக நிகழ்வானது 13.07.2026 மற்றும் 15.07.2026 ஆகிய தேதிகளில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் தாளாளர் முனைவர் அருட்பணி ஸ்டீபன் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் அமலநாதன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர்.
முதல் நாள் நிகழ்வில் டாக் அண்ட் க்யூர் உளவியல் ஆற்றுப்படுத்துதல் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீஜா ஜி. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சமூகப்பணியின் முக்கியத்துவம், தொழில்முறை திறன்கள் மற்றும் மனநலத்தின் அவசியம் குறித்து உரையாற்றினார். இரண்டாம் நாள் நிகழ்வில் சமூகப்பணி கல்வியாளரும் ஆய்வாளருமான அல் அமீன் ஜெ. சிறப்பு உரையாற்றி, சமூகப்பணித் துறையில் உள்ள தொழில் வாய்ப்புகள், தொழில்முறை நடைமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.
இந்நிகழ்வு சமூகப் பணித்துறையினரால் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டது. இதில் சமூகப் பணித்துறை மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பயனடைந்தனர்.



