தேனி, மே 23 –
தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் ஆண்டிபட்டி, வட்டங்களில் உள்ள வைகை அணை உபகோட்டம், வைகை அணை கட்டுப்பாட்டில் உள்ள ஆண்டிபட்டி வட்டத்தில் 3, பெரியகுளம் வட்டத்தில் 3 ஆக மொத்தம் 6 அரசு புறம்போக்கு வைகை அணை நீர்த்தேக்கத்தில் விவசாய நிலங்களுக்கு தேவைப்படும் களிமண் மற்றும் வண்டல் மண் ஆகியவற்றை விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக எடுத்துக் கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மண்பாண்ட பயன்பாட்டிற்காக களிமண் எடுக்க வரப்பெறும் விண்ணப்பங்களில் உண்மைத்தன்மை குறித்து சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரின் சான்று, இருப்பிடச்சான்று ஆகியன சரிபார்த்து, வைகை அணை நீர்த்தேக்கத்தில் இலவசமாக எடுத்துக் கொள்ள tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக சம்மந்தப்பட்ட வட்டாட்சியரிடம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.



