கருங்கல், ஜூன் 28 –
கருங்கல் அருகே பாலப் பள்ளம் பகுதி சேர்ந்த 19 வயது பெண் அந்தப் பகுதியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கல்லூரி சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. பெற்றோர் கருங்கல் போலீசில் புகார் அளித்தனர்.
விசாரணையில் கருங்கல் அருகே பூட்டேற்றி பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் மாணவி மாயமானது தெரிய வந்தது. போலீசார் செல்போன் நம்பரை வைத்து நடத்திய விசாரணையில் கேரள மாநிலம் பூவார் பகுதியில் இருவரும் இருப்பது தெரிய வந்தது. போலீசார் அங்கு வாலிபரின் உறவினர் வீட்டில் இருவரையும் பிடித்தனர். பின்னர் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்த போது இருவரும் திருமண வயது எட்டவில்லை என்று தெரிய வந்தது.
வாலிபர் செண்டை மேளம் வாசிக்கச் செல்லும் இசைக்கலைஞர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வயது பூர்த்தியாகாத காரணத்தால் அவர்களை சேர்த்து வைக்க முடியாது என்று போலீசார் தெரிவித்தனர். பின்னர் பேச்சுவார்த்தையில் ஒரு ஆண்டு காத்திருப்பதாகவும், குடும்பத்தினர் பேசி முடிவு செய்ய வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்து மாணவியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.