கன்னியாகுமரி, ஆக. 3 –
கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரை உள்ள 175 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரை பகுதியை மீட்டெடுக்கும் விதமாக, “கோஸ்டல் ரீ-ஜெனரேஷன் மூவ்மென்ட்” என்ற பெருந்திட்ட கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியை அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ இயக்கம் தொடங்கியது.
இதற்கான தொடக்கவிழா நிகழ்ச்சி கன்னியாகுமரி கடற்கரையில் நடந்தது. இதில் வீ த லீடர்ஸ்’ இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார். மேலும் அவர் கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் தூய்மை பணியிலும் ஈடுபட்டார்.
பின்னர் அவர் பேசுகையில்;- தமிழகத்தினுடைய மொத்த கடற்கரை நீளம் 1075 கிலோமீட்டர். இதில் நம்முடைய அமைப்பு 175 கிலோமீட்டர் தூர கடற்கரையை நாம் சுத்தம் செய்ய முன் எடுத்திருக்கிறோம். குமரியில் ஆரம்பித்து தூத்துக்குடி வரை இந்த வேலை ஆரம்பித்திருக்கின்றோம்.
நம்முடைய நோக்கம் இன்றிலிருந்து ஒரு வருஷம் கழித்து இந்த 175 கிலோமீட்டர் கடற்கரை பகுதி எல்லாமே சுத்தமாக இருக்க வேண்டும் என்பது தான். இயற்கையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கு. வீ த லீடர்ஸ் ஐ பொறுத்தவரைக்கும் சும்மா ஒரு நாள் கிளீன் பண்ணிணோம் என்று முடியவில்லை. இன்னைக்கு துவக்க வேலை மட்டும்தான்.
இந்தியாவில மட்டுமே ஒரு வருடத்திற்கு நாம் போடக்கூடிய பிளாஸ்டிக் குப்பைகள் மட்டுமே 26 ஆயிரம் டன். அதுல 16 ஆயிரம் டன் மட்டும்தான் நாம் எடுக்கிறோம். நிலத்தடி நீர் எவ்வளவு ஆழமா போயிருக்குன்னு பாருங்க. நம்முடைய காலத்திற்கு பிறகும் இந்த பீச் இருக்கணும், இயற்கை சுத்தமா இருக்கணும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாம இளைஞர்கள் நீங்க இங்க வந்து இந்த வேலையை செய்ய வேண்டும். வியர்வை வரணும். கையில் அழுக்குபடணும். நாம எல்லாத்தையும் எடுத்து அந்த குப்பையை பாதுகாத்து போடணும். நம்ம எவ்வளவு கிராம் பிளாஸ்டிக் எடுத்தோம் எவ்வளவு கிராம் பாட்டில் எடுத்தோம் இது எல்லாத்தையும் நாம இன்னைக்கு அக்கவுண்ட் பண்ண போறோம்.
இளைஞர் பெருமக்கள் தயவு செய்து, அடுத்த வாரமும் இந்த பீச்ல ஒரு போர்டை புடிச்சிட்டு ஒரு வாலண்டியர் தயவு செய்து எங்க ஊர்ல குப்பம் போடாதீங்க. இத கஷ்டப்பட்டு சுத்தம் பண்ணிருக்கோம். தயவு செய்து சுத்தமாக வைத்திருப்பதற்கு நீங்க உதவுங்க.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமே வீ த லீடர்ஸ் அமைப்பு நண்பர்கள் 73 ஆயிரத்து 245 பேர் இணைந்துள்ளனர். நீங்க இந்த வாரம் வீ த லீடர்ஸ் மெம்பரா இருக்கறீங்க அடுத்த வாரம் வீ லீடர்ஸ் மெம்பர் இல்லாதவங்க ஒருத்தவங்கள கூட்டிட்டு வந்து நாங்க பீச் சுத்தம் பண்றோம். குமரியை பொறுத்தவரை இந்தியாவில சுத்தமான குமரி முனை என்கின்ற பெயர் எடுப்பதற்கு வீதி லீடர்ஸ் குமரி மக்களோடு இணைந்து பணி செய்யும். என பேசினார்.



