திருப்பத்தூர், ஜூன் 03 –
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி ஊராட்சியில் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 103 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் எலவம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மேனகா விவேகானந்தன் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மேலும் திமு கழகத்தில் தொடர்ந்து சோர்வின்றி உழைத்து வருவதாக கழக நிர்வாகிகளை கௌரவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பெருமாள், அஞ்சல் துறை கோவிந்தராஜ், வார்டு உறுப்பினர் மாலினி நந்தனார், முன்னாள் துணைத் தலைவர் ராமச்சந்திரன், வார்டு உறுப்பினர் குமரேசன், சுப்பிரமணி, விஜய பிரகாஷ், அன்பு, சக்திமான், வடிவேல், ரஞ்சித் மற்றும் கழக நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.



