நாகர்கோவில், ஏப். 6 –
குளச்சல் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக தாரகை கத்பர்ட் போட்டியிடுகிறார். இவர் நாகர்கோவிலில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்ட கடலோர மக்கள் வளர்ச்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டார்.
கூட்டத்தில் கடலோர மக்களான மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் குறைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கு உடனடி தீர்வு காணவும், மேலும் அவர்களின் முன்னேற்றம் குறித்தும் இந்த கூட்டத்தில் அவர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கடலோர மக்கள் வளர்ச்சி மன்ற நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



